2013/07/13

மறுபிறவி...

வானத்து நிலவாய் நீயும் -அதன்
விண்மீனாய் நானும்
இணைய முடியா
இரு இமயன்களாய்
சுற்றி வந்த நாம்
எடுத்துவிட்ட வரங்களால்
புவி மாந்தர்களுள்
பெண் நீயும்
ஆண் நானுமாய் - மீண்டும்
இணைய முடியாமல்
இவ்வுலகில் வசிப்பதேன்...
***