லேபிள்கள்

ஜோக்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜோக்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2014/04/29

நகைச்சுவைகள்

மனைவி: என்ன பார்த்துகிட்டு இருக்கிங்க
கணவன்: ஒண்ணுமில்ல!
மனைவி: ஒண்ணுமில்லாமயா ஒரு மணிநேரமா மேரேஜ் சர்டிபிகேட்ட
பார்த்துகிட்டு இருக்கிங்க!
கணவன்: எங்கேயாவது எக்ஸ்பிரி டேட் போட்டுருக்கானு பார்க்கிறேன்.!!

-----------------------------------
மனைவி:- உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கான்னு
கல்யாணத்துக்கு முன்பே ஏன் என்கிட்டே சொல்லலை..
கணவன்:- சொன்னேனே… மறந்துட்டியா…
மனைவி:- எப்போ சொன்னீங்க…நீங்க சொல்லவே இல்லை..
கணவன்:- உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்னு நான் சொல்லலை..
மனைவி:-????????

------------------------------------
நபர்1:  இங்கிலீசு படத்துக்கும், தமிழ் படத்துக்கும் என்னடா வித்தியாசம்?
நபர்2:  இதுக்கூட தெரியாதா? தமிழ் படத்துல இங்கிலுசுல பேசுவாங்க…ஆனா இங்கிலுசு படத்துல தமிழ்ல பேச மாட்டாங்க…

-------------------------------------
இன்ஸ்பெக்டரிடம் : சார் “பக்கத்து வீட்டுக்காரர் சம்சாரம் காணாம போய் மூணு மாசமாகுது”
அதுக்கு நீ ஏன்யா புகார் குடுக்கிற
அந்த ஆளு புகார் குடுக்காம ஜாலியா சுத்திட்டு இருக்கான் சார்..!

( அதானே அடுத்தவன் சந்தோசமா இருக்கப்படாதே ! என்னா ஒரு கொல வெறி !) 
----------------------------------------
மனைவி நேர தாமதமாக வீட்டிற்கு வந்தாள்... நேராக தனது படுக்கை அறைக்குச்சென்றாள்...
அங்கே,

போர்வைக்கு வெளியே 4 பாதங்கள் தெரிந்தன. உடனே ஆத்திரத்துடன் கிறிக்கெட் மட்டையை எடுத்து தனது ஆத்திரமும், அலரல் சத்தமும் தீரும் வரை அடித்தாள்.

அடித்துவிட்டு சமையலறைப்பக்கம் போனாள்...
அங்கே...

கோப்பி குடித்தபடி கணவர் பத்திரிகை வாசித்துக்கொண்டிருந்தார்...
மனைவியை கண்டதும்...

"உங்க அப்பா அம்மா வந்திருந்தாங்க... நான் எமது படுக்கை அறையை அவர்களுக்கு கொடுத்துவிட்டேன்... "
----------------------------------------
டாக்டர்: கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க...!

சர்தார்ஜி: அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி இந்தக் க்ரீமைத் தடவுறது?
 

2013/12/11

நகைச்சுவைகள்

நா‎ன் இந்தக் கோவிலுக்கு நாலு வருஷமா வந்துட்டிருக்கேன்.. தெரியுமா?"
"உங்க வீடு எ‎ன்ன அவ்வளோ...தூரமா இருக்கு?" 
 *****
என் கணவர் யாருமே இல்லாதப்போ தானாவே சிரிச்சுக்கிட்டிருக்கிறார் டாக்டர்...!""
"போகுது விடும்மா! நீ இல்லாத போதாவது தைரியமா சிரிச்சுட்டு போவட்டும்!"
*****
"இதென்ன... டாக்டரை வரச்சொல்லி போன் செய்தீங்க... ஒரு குடும்பமே வந்து நிக்குதே?"
"அதான் சொன்னேனே.. இவர் குடும்ப டாக்டர்ன்னு...!
*****
டாக்டர் :“ஊசி போடும்போது கண்ணை மூடிட்டீங்களே…. மனசுல சாமியை நினைச்சுக்கிட்டீங்களா?”
சம்போ : “இல்ல டாக்டர்…. நர்ஸை நினைச்சுகிட்டேன்….!”
*****
அவர் : இன்ஸ்பெக்டர் சார், இன்னிக்கு சாயந்தரத்துக்குள்ள எப்படியாவது
என் பையனைக் கண்டுபிடிச்சுக் குடுத்துடுங்க.
இன்ஸ்பெக்டர் : ஏங்க இப்படி அவசரப்படறீங்க?
அவர்: இல்லேன்னா எடுத்துக்கிட்டுப் போன இரு நூறு ரூபாயையும் செலவழிச்சுடுவான்.
*****
திருடன் :(சிறுவனிடம்) தம்பி! உனக்கு மிட்டாய் தருகிறேன். உங்க வீட்ல நகைகளை எங்கே வைப்பாங்க சொல்லு..
சிறுவன் : அடகுக் கடையிலே!
*****
வித்வான் : நேத்து என் கச்சேரிக்கு வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்.
நம்மவர் : வரனுணும்னுதான் சார் நினைச்சேன்.அதுக்குள்ள வேறொரு கஷ்டம் வந்திருச்சி!.
*****
உமா : நான் புதுசா ஒரு பாட்டு எழுதினேன்
பாமா : எதை வைத்து?
உமா : பேனாவை வைத்து தான் எழுதினேன்!
*****
ரேணு : அவங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன சண்டை.
பானு : அவங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும்.
ரேணு : அப்ப ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்க வேண்டியதுதானே
*****
ஆசிரியர் : அமெரிக்கா எங்கே உள்ளது?
மாணவன் : தெரியாது சார்!
ஆசிரியர் : பெஞ்சின் மேல் ஏறி நில்லுடா..!
மாணவன் : ஏறி நின்னா தெரியுமா சார்?
*****
பிரசவ ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும் ?
கர்ப்பமா போவணும்.

ஜோக்ஸ்

கணவன் : நம்ம பையன் எல்லா பாடத்திலும் முதல் மார்க்னு சொன்னான்,,, நீ ஏண்டி முழிக்கிறே ?
மனைவி : அவன் சொன்னது எல்லா பாடத்திலும் ஒவ்வொரு மார்க் வாங்கியிருக்கிறதை.
*****
வேலு : நேத்து பல்லே விலக்கலை .. ..
ரமனன் : ஏன் .. ..
வேலு : என் மனைவி பக்கத்திலே இருந்ததால் வாயே திறக்க முடியலை.
*****
வேலு : சட்டத்தை மாத்தணும்ங்கறதுல அவர் உறுதியா இருக்கார் .. ..
பாக்கி : ஏன் .. .. .. ?
வேலு : அவங்க வீட்ல எல்லா சட்டத்தையும் கரையான் அரிச்சிடுச்சாம் ..
*****

கணவன் : வொய்ஃபுக்கு(wife) அர்த்தம் தெரியுமா? வித்அவுட் இன்பர்மேஷன் ஃபைட்டிங் எவ்ரிதிங் ( without information fighting everything)
மனைவி : அதுக்கு அர்த்தம் அப்படி இல்லைங்க ! வித் இடியட் ஃபார் எவர் ( with idiot for ever)
கணவன் : தேவைதான்டி எனக்கு !
*****

மனைவி : என்னை, பெண் பார்க்க வந்தன்னிக்கு, நீங்க டிபனை தொடவே இல்லையே ஏன்?”
கணவன் : ரெண்டாவது ‘ஷாக்’ எதுக்குன்னு, தான்..!
*****

தரகரே… நீங்க ஒரு பெரிய விஷயத்தை மறைச்சிட்டீங்க.”
“என்ன சொல்றீங்க?”
“பெண் அஞ்சடி உயரம்னு சொன்ன நீங்க, மூணு அடி அகலம் இருப்பாள்னு சொல்லவே இல்லையே…”
*****

“பாடம் எல்லாம் முடிஞ்சி போச்சு.. ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க.. எதுவா இருந்தாலும் தயங்காமக் கேளுங்க..”
“சார் உங்க பொண்ணு பேரு என்ன சார்?”
*****

ஏன்டா 20 நாள் காலேஜுக்கு வரல…?”
“சார்… எங்கப்பா எப்பவும் சொல்லுவார் ஒரு இடத்துக்கு அடிக்கடி போனா மரியாதையா இருக்காதுனு”
*****

ஐந்து வயது மகன்: அம்மா, ஐ லவ் யூ!
அம்மா: ஐ லவ் யூ டூ!
இருபது வயது மகன்: அம்மா, ஐ லவ் யூ!
அம்மா: என் கிட்ட காசு இல்லை. ஒழுங்கா கிளம்பு.
*****

எம்.டி.: எதுக்கு அடுத்த வாரம் லீவு வேணும் உனக்கு?
ஊழியர்: எனக்கு கல்யாணம் சார்!
எம்.டி.: உனக்கு எந்த முட்டாப்பய பொண்ணு கொடுக்கறான்
ஊழியர்: என்ன சார் மறந்துட்டீங்களா? உங்கப் பொண்ணைத்தான் கல்யாணம் செஞ்சுக்கப்போறேன்!
*****

கிளாஸ்ல ஃபர்ஸ்ட் உங்க மகன் தான்ங்க!
அப்படியா, ரொம்ப சந்தோஷம் சார்!
நீங்க வேற… பெல் அடிச்சதும் அவன் தான் வகுப்பிலேருந்து முதல்ல வெளியேறுவான்.
*****

இரண்டு பள்ளி சிறுவர்கள் பேசிக்கொண்டது;
நம்ம டீச்சருக்கு வர வர ஞாபக மறதி அதிகமாயிடுச்சுன்னு நினைக்கிறேன்.
எப்படிச் சொல்ற?
பின்ன என்ன, அவங்களே போர்டில சிலப்பதிகாரம்னு எழுதிட்டு,
நம்மகிட்ட சிலப்பதிகாரத்தை எழுதியது யார்னு கேட்கிறாங்க.
*****

எம்பிளாய்மெண்ட் ஆபிசிலே நீ பதியறதுக்கு, உன்னோட அப்பா, தாத்தாவையும் கூட்டிட்டு வந்திருக்கியே! ஏன்?”
“அப்பாவுக்குப் புதுப்பிக்கணும்… எங்க தாத்தாவுக்கு முதல் இண்டர்வியூ வந்திருக்கு!”
*****

டாக்டர் இவ்வளவு மருந்தையும் ரெண்டே நாள்ல சாப்பிட்டு முடிக்கணும்னு சொல்றீங்களே, ஏன்?”
“ரெண்டு நாளைக்கு அப்புறம் எக்ஸ்ப்ரி டேட் முடிஞ்சுடும்.”
*****
“தலைவரால சட்டசபையே அதிர்ந்திடுச்சாம்…”
“அடேங்கப்பா … அப்படி என்ன பேசினாரு?”
“பேசலைய்யா… குறட்டை விட்டாரு!”
*****

காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?……
சீனாவுல தான் பிறந்தது…..
ஏனென்றால் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY!
*****

நபர் – 1: இ‌ங்க பா‌த்‌தீ‌ங்களா ஹெல்மெட், லைசன்ஸ், வண்டி
இன்ஷ்யூரன்ஸ் இதெல்லாம் மற‌க்காம எடுத்துட்டு வ‌ந்து‌ட்டே‌ன்
நபர் – 2:அது ச‌ரி ஏ‌ன் நட‌ந்து வ‌ர்‌றீ‌ங்க.
நபர் – 1: ஐய்யைய்யோ….! இன்னிக்கு வண்டிய எடுத்துட்டு வர மறந்துட்டேன் சா‌ர்.
*****

புதுசா பதவி ஏத்த அமைச்சரோட அலுவலகத்துல ‘எல்’போர்டு மாட்டியிருக்காங்களே… ஏன்…?” அதுவா…
அவர் இப்பத்தான் ‘ஊழல்’ செய்ய ஆரம்பிச்சிருக்காராம்…”
*****

டாக்டர்: “நீங்க உடம்பைக் குறைக்கணும்; இனிப்பைக்
குறைக்கணும்; காரத்தைக் குறைக்கணும்”
நோயாளி: “டாக்டர், நீங்க ஃபீசை குறைக்கணும்”
*****

நீதிபதி : ” அந்த வீட்டுப் பூட்டை உடைத்து ஏன் திருடினாய்?”
திருடன்: “என்னோட சாவி எதுவுமே அந்தப் பூட்டைத் திறக்காததால கடைசியா பூட்டை உடைக்க வேண்டியதாப் போச்சிங்க”
*****
“சுவரில் எழுதாதே’ன்னு இருந்தது. நான் போயி…”
“என்ன செய்தே?”
”சரி எழுதலை’ன்னு எழுதிட்டு வந்திட்டேன்”
*****

மனைவி : என்னங்க பாருங்க உங்க பையன் பாடப்புத்தகத்தை எப்படிக் குதறி வச்சிருக்கான்னு?
கணவன் : நான் தான் சொன்னேனே, அவன் படிப்புல புலின்னு.
*****

எ‌ன் பொ‌ண்டா‌ட்டிய எ‌ன்ன தா‌ன் செ‌ய்றது?
ஏ‌ன் எ‌ன்ன ப‌ண்றா‌ங்க?
நான் எது செஞ்சாலும் என் பொண்டாட்டி குறுக்கே நிக்கிறா.
கார் ஓட்டி பாரேன்.
*****
“நான் ஒரு முட்டாள். உன்னைப் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டேனே?” “அது கல்யாணத்துக்கு முன்னாடியே தெரியும்… அதனால தான் சம்மதிச்சேன்…!”
*****
“வெளிநாட்டிலிருந்து உன் பையன் என்ன வாங்கி வந்தான்”
“நாலு செண்ட் தான்”
“ஏன்..ஒரு ஏக்கர் வாங்கிட்டு வரச் சொல்லி இருக்கலாமே…”
*****
என் உயிரைக் காப்பற்றிய நர்சையே நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.”
“எப்படிக் காப்பாத்தினா?”
“ஆபரேசன் ரூமிலேயிருந்து பின்வழியா என்னைத் தப்பிச்சிப் போக வச்சது அவதான்!”
********

2013/12/10

அறுவை ஜோக்ஸ்

சோமு: வரதட்சணையே வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது என் மனசை உறுத்திக்கிட்டே இருக்குது!
ராமு: அதனால...
சோமு: வரதட்சணையே வாங்காம இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு பிராயச்சித்தம் செய்யப் போறேன்.
*****

ஆசிரியர்: மூண்றாம் உலகப் போர் வந்தால் என்ன ஆகும்
மாணவி : (சோகமாக)வரலாறில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கும்.
*****

டாக்டர்:என்னையா உன் இதயத்திலே பாட்டுச்சத்தம் கேட்குது
நோயாளி:டாக்டர் நீங்க காதுல மாட்டியிருக்கிறது வாக்மன்.
*****

ஆசிரியர் : கோபு நீ மட்டும் ஏன் ஹோம் வேக் பண்ணலே
கோபு : சேர் நான் ஹாஸ்டலே அல்லா தங்கி இருக்கேன்.
*****

டாக்டர்: உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நோயாளி: நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.
*****

பேரன் : இனிமே கம்ப்யூட்டர் படிச்சா தான் வேலை கிடைக்கும்
தாத்தா: அப்ப நீ படிச்சா கிடைக்காதா..?
*****

மருந்து பாட்டிலை கையில் வெச்சிகிட்டு ஏன் தடவி கொடுகிறீங்க?
டாக்டர் தான் தலை வலிச்சா இதை எடுத்து தடாவனூன்னு சொன்னார்.
*****

என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது அவபேசஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்.
"யோவ் பாங்க்ல வந்து ஏன்யா இதை எல்லாம் சொல்றே"
"நாம கஷ்டத்தை சொன்ன தான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க"
*****

கிளி ஏன் கீ கீ ன்னு கத்துது ?
அதோட கூண்டுச் சாவி தொலைஞ்சு போச்சாம்...
*****

இவன்தான் குற்றவாளின்னு ஒப்புக் கொள்கிறானே நீங்கள் ஏன் இல்லேன்னு வாதாடுறீங்க?
யுவர் ஆனர் இவன் பெரிய கேடி இவனை நம்பவே கூடாது.
*****

2013/09/12

சிரிப்புக்கள்...

திரும்ப திரும்ப என் வீட்டுல திருட்டு போகுது சார்
அப்போ திரும்பாதீங்க....

நாம் நினைப்பெதெல்லாம் நடக்க ஆரம்பித்தால் என்ன ஆகும்?
டிராபிக் ஜாம் ஆயிடும்

மாப்பிள்ளை நல்ல பசையுள்ள கை
ஏன் என்ன பண்ணுறார்
போஸ்டர் ஒட்டுறார்


என்ன உங்க வீட்டு காப்பி ஒரே ஃப்னாயில் வாசனை அடிக்குது.. 75_75.gif நான் தான் சொன்னேனே...என் மனைவி வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைச்சுடுவான்னு .

காதலன் : நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன். biggrin.gif காதலி : அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா? rolleyes.gif 
காதலன் : மெதுவா சொன்னதால அவங்களுக்கு கேட்கலை...
காதலி : !!!! ohmy.gif 


ஒரு நேர்முகத்தேர்வில்:
கேள்வி கேட்பவர்:எலக்ட்ரிக் மோட்டார் எப்படி ஓடுகிறது?
வேலைக்கு வந்த நாதாரி: டுர்ர்ர்ர்.... டுர்ர்ர்ர்.. டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...
கே.கே: யோவ்... நிறுத்து..நிறுத்து
நா: டுர்ர்ர்ர்ர்ர்...டப்..டப்..டப்...!


மரணப்படுக்கையில் இருந்த அப்பா தன் மகனிடம்...

“மகனே, மேலத்தெரு முருகேசன் எனக்கு பத்தாயிரம் ரூபா தரணும்டா”
“கரெக்டா வாங்கிக்கறேன்ப்பா”
“கீழத்தெரு கணேசன் என்கிட்ட நாப்பதாயிரம் ரூபா வாங்கிருக்கான்”
“மறக்காம வாங்கிக்கறேன்ப்பா..”
“எதிர்வீட்டு கோவாலுக்கு நான் ஒருலட்சரூபா குடுக்கணும்டா”
“ஐயையோ.. எங்கப்பா நல்லா பேசிகிட்டிருந்தாரு. திடீர்னு நினைவு தப்ப ஆரம்பிச்சிடுச்சே..”


சோமு : கடவுளே! எனக்கு ஒரு ரூம் நிறைய தங்கம் கொடு.
ராமு : எனக்கு ஒரு ரூம் நிறைய வைரம் கொடு.
கோமு : எனக்கு அந்த ரெண்டு ரூம்களோட சாவியைக்கொடு.
சோமு - ராமு : ?!?!?!?!?!? 


வாடிக்கையாளர்: வாழைப்பழம் எவ்வளவுப்பா?
கடைக்காரர்: ஒரு ரூபாய்.
வாடிக்கையாளர்: 60 பைசாவுக்கு வராதா???
கடைக்காரர்: 60 பைசாவுக்கு தோல் தான் வரும்.
வாடிக்கையாளர்: இந்தா 40 பைசா, தோல வச்சிக்கிட்டு பழத்த கொடு.
அப்பா: என்னடா! டெஸ்ட்ல பூஜ்யம் மார்க் வாங்கிட்டு வந்திருக்க?
பையன்: அது பூஜ்யம் இல்லப்பா... வாத்தியார் நான் நல்லா படிச்சதுக்காக "O" போட்டாங்க...

2013/09/09

குட்டி ஜோக்ஸ்..

அண்ணன்: ரூமை மூடிக்கிட்டு ஏன் மருந்து சாப்பிட்டாய்? 
தம்பி: டாக்டர் தான் 'அறை'மூடி மருந்து சாப்பிட சொன்னார்.


டீச்சர் -ஒரு ஊருல ஒரு வயசான பாட்டி இருந்தாங்க ......
பையன் -போங்க மிஸ்நீங்க பொய் சொல்லரீங்க  எந்த ஊர்லயும் ஒரு வயசுல பாட்டி இருக்கமாட்டாங்க 

சர்தார் ஜீ தன் நண்பருடன் உரையாடினார்
சர்தார் ஜீ : நான் பஞ்சாப்பில் பிறந்தேன்
நண்பர் : அப்படியா? எந்தப் பகுதி?
சர்தார் ஜீ : என் முழுப்பகுதியும் பஞ்சாப்பிலேதான் பிறந்தது

என்னதான் பசங்க
150 CC pulsar
160 CC Apache
180 CC Cbz
225 CC karisma பைக் ஐ வாங்கினாலும்
அது 80 CC Scootyக்கு பின்னாடிதான் போகும்



2013/09/07

சிரிப்பூக்கள்....

டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம் .
இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு ???????
என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க ?
டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான் .
நீங்க உடனடியா மீன் , ஆடு , கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் .
அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர் .
டாக்டர் என் மனைவி ஓவரா டி . வி . பாக்குறா... எந்த அளவுக்கு பாக்குறாங்க ?...” கரண்ட் கட்டானாலும் , டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு !!!
வக்கீல் : உனக்கு திருமணமாகிவிட்டதா ?
சர்தார் : ஆகிவிட்டது .
வக்கீல் : யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய் ?
சர்தார் : ஒர் பெண்ணை .
வக்கீல் : பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள் ?
சர்தார் : ஆம் என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே !!!..
சார் ,
டீ மாஸ்டர் டீ போடறாரு ,
பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு ,
மேக்ஸ் மாஸ்டர் மேக்ஸ் போடறாரு ,
நீங்க ஹெட்மாஸ்டர் தானே ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க ?..
” நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க ”
” அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை …. பத்திரமா இருக்கும் ”
ஒரு காப்பி எவ்வளவு சார் ?
5 ரூபாய் .
எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?
டேய் . சாவுகிராக்கி அது XEROX காப்பிடா !
உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு .
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும் .
இன்னிக்கி 8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி . வி யில சொன்னாங்க . நீங்க கேட்டீங்களா ?  இல்லை   அவங்கதான் சொல்லியிருக்காங்க... 
ஒரு புவியியல் ஆசிரியர் வகுப்பில் ஒரு மாணவனை பார்த்து
பூமி எத்தனை டிகிரி சாய்வாக சுற்றுகிறது என கேட்டார் அதற்கு அந்த மணவன் ”டிகிரி படித்தவர்களிடம் கேட்க வேண்டிய 
கேள்வியை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்?” என்றான்

சார் உங்க பையன் இங்கிலீஷ், தமிழ், கண‌க்கு என எல்லா சப்ஜெக்டுலயும் ரொம்ப ரொம்ப வீக்கா இருக்கான்அதுக்கு நான் என்ன செய்யணும் சார்? 
10000 ரூபா டொனேஷன் குடுத்தீங்கன்னா எல்லாம் சரியாயிடும்.

ஆசிரியர்: உலகிற்கு முக்கியம் சூரியனா சந்திரனா?மாணவன்: சந்திரந்தான் சார்!
ஆசிரியர்: எப்படி?
மாணவன்: சார் பகல்ல வெளிச்சம் இருக்கும்போதுதான் சூரியன் ஒளி கொடுக்குது. ஆனால் சந்திரன் ராத்திரில வெளிச்சம் இல்லாத போது ஒளி கொடுக்குதுல்ல
ஆசிரியர்: ?!?!?!.

ஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான் சார். பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க, சார். 
ஆசிரியர்:தங்கள் மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலு விழந்து இருக்கின்றான், ஐயா..! 

ஒரு யானையும், எலியும் லவ் மேரேஜ் பண்ணிக்கிச்சு.! 
யானை அடுத்த நாளே செத்துடுச்சு.! 
அப்போ எலி சொல்லுச்சு “ஓ! அன்பே! ஒரு நாள் காதலுக்காக ஆயுசு முழுக்க என்னை குழி தோண்ட வெச்சுட்டியே.?

அந்த கோயில் மண்டபத்தில் இரவில் யாரும் தங்குவதில்லையே ஏன்?
அங்குள்ள கோவில் யானைகளுக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதியாம்...

ஒரு நாள் ஒரு கிளிக்கு கல்யாணம் பண்ண ஒரு போட்டி வெச்சாங்க.!
அதுல எல்லா பறவைகளும் கலந்துக்கிடுச்சு!
போட்டில காக்கா ஜெயிச்சுடுச்சு.!
காக்கா கிளிக்கு தாலி கட்டறப்ப “கல்யாணத்தை நிறுத்துங்க”ன்னு ஒரு குரல்.!
போலீஸ் காக்காவை அரெஸ்ட் பண்ணிட்டாங்க.! நினைவு இருக்கா?
ரெண்டாங்கிளாஸ் படிக்கறப்ப காக்கா பாட்டியோட வடையை திருடிடுச்சே..
அதனால தான்.!

2013/08/28

Funny ஜோக்ஸ்...

மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது... 
கணவன்: அடி செருப்பால! ... உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது? 

---------------------------------------------
அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற? 
மகன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன். 
---------------------------------------------
அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்'ல லைட்டே எரியல? 
மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா! 

-----------------------------------------------
எங்க தலைவர் தண்ணியைச் சிக்கனமா பயன்படுத்துவாரு…
எங்க தலைவரு ‘சிக்கனோட’ பயன்படுத்துவாரு.

------------------------------------------------------------
எதுக்குடா மளிகைக் கணக்கு லாண்டரி கணக்கெல்லாம் உன் நோட்டுல எழுதிக்கிட்டு இருக்கே?
எங்க வாத்தியார்தான் வீட்டுக் கணக்கை எழுதி வரச் சொன்னாருப்பா….

------------------------------------------------------------
உங்க சின்ன பையன் எப்படி அந்த சேரில் ஏறினான்?
அது ‘ஈஸி’ சேராச்சே!

-------------------------------------------------------------
மனைவி:- எங்கிட்ட உங்களுக்கு புடிச்சது என்ன? 
அழகான
 முகமா!!!

அன்பான மனமா!!!
பணிவான குணமா!!
கணவன் :-”உன்னோட இந்த காமெடிதான்”

------------------------------------------------
மாலா:- ஏண்டி கீதா நீ ஏன் துவைக்கிற…
வாஷிங் மெஷின் எங்க? 
கீதா:- அது ஆபீஸ் போயி்ருக்குடி

------------------------------------------------
அப்பா: என்னடா! டெஸ்ட்ல பூஜ்யம் மார்க் வாங்கிட்டு வந்திருக்க?
பையன்: அது பூஜ்யம் இல்லப்பா… வாத்தியார் நான் நல்லா படிச்சதுக்காக “O” போட்டாங்க…

-------------------------------------------------------------
நவீன திருக்குறள்
அகர முதல எழுத்தெல்லாம் தகர
சிலேட்டில் எழுதிப் பழகு.


இன்பத்துள் இன்பம் சொறியின்பம் அவ்வின்பம்
சொரிந்தபின் துன்பம் தரும்.


போடுக தண்ணி போடுக போட்டபின்
ஆடுக அதற்கு தக.

--------------------------------------------------------------
புதிய ‘மா’த்திச்சூடி…
அறஞ் செய இரும்பு
ஆறுவது காபி
இயல்வது பெட்டிங்
ஈவது லஞ்சம்
உதவுவது கடத்தல்
ஊதுவது சிகரெட்
எப்படியும் பணம் சேர்
ஏமாற்றிப் பிழை
ஐஸ் வைக்கக் கற்றுக்கொள்
ஒருவனை (ளை) மட்டும் நேசி
ஓசியில் வாழப் படி.
ஒள… (தெரியலீங்க)

-----------------------------------------------------------
ஒரு ஜவுளிக் கடையில் மனைவிகளை தொலைத்துவிட்ட இரு கணவன்மார்..  கணவன் 1 ; உங்க மனைவி எப்படி இருப்பாங்க..?  
கணவன் 2 ; சிவப்பா, உயரமா, திரிஷா மாதிரி.. ஆமாம் உங்க வீட்டம்மா எப்படி இருப்பாங்க..?  
கணவன் 1 ; அந்தக் கழுதை எப்படி இருந்தா என்ன‌? வா.. உன் பொண்டாட்டியை தேடுவோம்..!!!  

2013/08/25

கொஞ்சமாவது சிரிங்கப்பா..

பரிட்சை எழுதிய மாணவன், பதில் பேப்பருடன், 100 ரூபாய் நோட்டை இணைத்து, “ஒரு மார்க்குக்கு ஒரு ரூபாய்” என குறிப்பும் எழுதி அனுப்பினான்.
தேர்வுத் தாளைத் திருத்தியவரோ ஒரு சர்தார்ஜி.

பேப்பரைத் திருத்தியதும், அவர் 81 ரூபாயை அத்துடனேயே இணைத்து, இப்படி எழுதி அனுப்பினார்.
“நீ 19 மார்க் வாங்கியிருக்கே… மீதி சில்லறையை பத்திரமா வச்சுக்கோ…”
-----------------------------------------------
 பில்கேட்சுக்கு கடிதம் எழுதினார் சர்தார்ஜி
மதிப்பிற்குரிய பில்கேட்ஸ்,
என் வீட்டு உபயோகத்துக்காக ஒரு கம்ப்யூட்டர் வாங்கினேன். அதில் சில பிரச்னைகள் இருப்பதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.
1. அதில் ஸ்டார்ட் பட்டன் இருக்கிறது. ஆனால் ஸ்டாப் பட்டன் இல்லை. சரிபார்க்கவும்.
2. உங்கள் கம்ப்யூட்டரில் ரீசைக்கிள் என இருக்கிறது. என்னிடம் ஏற்கனவே ஒரு சைக்கிள் இருப்பதால் ரீஸ்கூட்டர் கிடைக்குமா?
3. எனக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியும். மைக்ரோசாஃப்ட் வேர்டுக்குப் பதிலாக, மைக்ரோசாஃப்ட் சென்டென்ஸ் படிக்க வழி உண்டா?
4. கம்ப்யூட்டரில் மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் இருக்கிறது. நான் வீட்டில் உபயோகிப்பதால், மைக்ரோசாஃப்ட் ஹோம் கிடைக்குமா?
கடைசியாக ஒரு சொந்தக் கேள்வி
உங்கள் பெயரில் “கேட்ஸ்” இருக்கிறது. ஆனால் நீங்களோ “வின்டோஸ்” விற்கிறீர்கள். ஏன் இந்த முரண்பாடு?
---------------------------------------------
கிரிக்கெட் மேட்ச் பற்றிக் கட்டுரை எழுதச் சொன்னாராம் டீச்சர்.
எல்லா மாணவர்களும் பரபரப்பாக எழுதிக் கொண்டிருக்க, சர்தார்ஜி மாணவன் இப்படி எழுதிக் கொடுத்தானாம்…
“மழையின் காரணமாக கிரிக்கெட் மேட்ச் கன்சல் செய்யப்பட்டது…”
----------------------------------------------
ஹொட்டல் முதலாளி: ஏன் சார், தினமும் பார்சல் வாங்கறீங்க… ஒருநாளாவது இங்கயே சாப்பிடலாமில்லே..?
சர்தார்ஜி: டாக்டர் என்னை ஹொட்டல்ல சாப்பிடக்கூடாதுனு சொல்லிருக்காரு. அதான்!
---------------------------------------------
செல்போன் டவர்களையும், அதில் ஒளிரும் சிகப்பு விளக்குகளையும் பார்த்த சர்தார்ஜிக்கு ஒரே பூரிப்பு. சந்தோஷத்தில் இப்படிக் கத்தினாராம் அவர்.
“இந்தியா எவ்ளோ வேகமா முன்னேறிட்டு வருது… ஏரோபிளேன் போகறதுக்குக் கூட, உயரத்துல எப்படி டிராஃபிக் சிக்னல் வச்சிருக்காங்கப்பா!”
---------------------------------------------
டாக்டர்: நீங்க இவரை 1 மணி நேரம் முன்னாடி கொண்டு வந்திருந்தீங்கன்னா காப்பாத்தியிருக்கலாம்…
நோயாளியின் உறவினர்: அதுக்கென்ன செய்ய? இவங்களுக்கு ஆக்சிடென்ட் நடந்தே கால்மணி நேரந்தானே ஆச்சு?
---------------------------------------------
கடவுளுக்கு ஒருநாள் திடீர் ஆசை. மது அருந்த விரும்பி, பாருக்குப் போகிறார். முதலில் 5 பாட்டில் விஸ்கி, அடுத்து 5 பாட்டில் ரம், பிறகு 5 பாட்டில் ஒயின் என வரிசையாகக் குடிக்கிறார். அவரைப் பார்த்த பார் கடைக்காரருக்கோ ஆச்சரியம்.
கடைக்காரர்: “பொதுவா ரெண்டு ஃபுல் அடிச்சாலே, எல்லாரும் ஃபிளாட் ஆயிடுவாங்க. உனக்கு மட்டும் எப்படி இன்னும் போதையே ஏறலை? யார் நீ?” எனக் கேட்கிறார் கடவுளிடம்.
கடவுள்: “நான்தான் கடவுள்” என்கிறார் அவர்.
கடைக்காரர்: “தோடா… இப்பதான் மப்பு ஏற ஆரம்பிச்சிருக்கு” என்று சிரித்தார் கடைக்காரர்.
--------------------------------------------

2013/08/06

கொஞ்சம் சிரிப்போமே....

கல்யாணம் பண்ணிக்க சொல்லி உன் பின்னாடி பொண்ணுங்களா அலையுதுன்னு சொல்லி ஏதோ பயங்கரமா பில்டப் கொடுக்கிறீயே.. அதில ஏதாவது 2 பொண்ண பத்தி சொல்லு...
ஒண்ணு எங்க அம்மா.. இன்னொன்னு எங்க பாட்டி.
------------------------------------------------------------------------------------------------------



நீ‌‌திப‌தி : ‌நீ‌ங்க‌ள் யாரை‌த் திருமணம் செய்து கொண்டிருக்‌கி‌றீ‌ர்க‌ள்?
ஆ‌ண் : ஒரு பெண்ணை.
‌நீ‌திப‌தி : பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள்?
ஆ‌ண்: ஏ‌ன் செ‌ய்து கொ‌ள் மா‌ட்டா‌ர்க‌ள். என் தங்கை ஒரு ஆணைத்தான் திருமணம் செய்து கொண்டிருக்கிறாளே!!!.
--------------------------------------------

நேத்து நான் என் மனைவியை முட்டி போட வெச்சிட்டேன்!
நிஜமாவா, எப்படி?
அவ என்னை அடிக்க வரும்போது நான் கட்டிலுக்கு அடியிலே போய் ஒளிஞ்சிகிட்டேன்!’…
--------------------------------------------------------------------

வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போது, குரங்கு ஒன்று உள்ளே வந்துவிட்டது …
ஆசிரியர் மாணவர்களிடம் : யாருடா .. இது, நியூ அட்மிஷனா ?
மாண்வர்கள் ஆசிரியரிடம் : இல்ல சார், நியூ அப்பாய்ன்மென்டு…. ன்னு தோணுது…
--------------------------------------------------------------------

நோயாளி : டாக்டர் ..! எனக்கு தினமும் 16 மனி நேரம் தூக்கம் வருது..! அதுக்கு அலுப்பு தானே காரணம் ..?
டாக்டர் : அதுக்கு காரணம் அலுப்பு இல்ல..! ” கொழுப்பு”..
-------------------------------------------------------------------

அந்த கதாசிரியர் எந்த நேரமும் காதுல பஞ்சு வச்சுக்கிட்டு எழுதுராறே ஏன்?
சூ, சத்தம் போடாதே! அவர் பஞ்சு டயலாக் எழுதுராரு!
--------------------------------------------------------------------



மிருகக் காட்சி சாலையில் புலி ஒன்று, பார்வையாளரில் ஒருவனைக் கொன்றுவிட்டது. அதைக் கண்டு பக்கத்து கூண்டில் இருந்த குரங்கு புலியைப் பார்த்துக் கேட்டது
குரங்கு: ஏன் அவனைக் கொன்னே?!
புலி : அந்தப் பரதேசி நாய் மூணு மணி நேரமா என்னைப் பார்த்துச் சொல்றான் “எவ்ளோ பெரிய பூனைன்னு”
--------------------------------------

நண்பன்: ஏண்டா ஜானி உன்னை ப்ரின்சிபால் திட்டினார்?
ஜானி: ப்ரின்சிபால் அவரோட நாயை காணவில்லைன்னு நியூஸ் பேப்பர்ல விளம்பரம் கொடுக்க சொன்னாரு! நான் ப்ரின்சிபால் நாயைக்காணோம்னு விளம்பரம் கொடுத்திட்டேன்!!
----------------------------------------------

2013/07/07

சிரிப்புகள்

தபால்காரர்: உங்க பார்சலை கொண்டுவர நான் ஏழு கிலோ மீட்டர் நடந்து வருகிறேன்.
சர்தார்: ஏன் இவ்வளவு தூரம் நடக்கறீங்க. பேசாம தபால்ல அனுப்பி இருக்கலாமே?
*****

சர்தார்: (தன் நண்பியிடம்) இரவுக்கு என் வீட்டுக்கு வா. யாரும் இருக்க மாட்டார்கள்.
( நண்பி அவ்வாறே சர்தாரின் விட்டுக்கு இரவு சென்றார். உண்மையில் யாருமே அங்கு இல்லை. சர்தார் உட்பட)
*****

ஒரு சர்தார்ஜி புகைப்படக்காரரை ஒரு சாவு வீட்டில் பத்து பேர் சேர்ந்து அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வழியாகச் சென்ற ஒருவர்
"ஏங்க அவரைப் போட்டு அடிக்கறாங்க?" என்று மற்றொருவரைக் கேட்கிறார்.
"பின்ன என்னங்க? இறந்தவர் உடலைப் போட்டோ எடுக்கச் சொன்னால் ஸ்மைல் ப்ளீஸ் என்றால் என்ன செய்வார்களாம்?"
*****

சர்தார்: (பணியாளிடம்) போயி செடிக்கு தண்ணீர் ஊத்து.
பணியாள்: நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது முதலாளி ஜி.
சர்தார்: அதனாலென்ன? குடையை எடுத்துக் கொண்டு போ.

2012/08/07

நகைச்சுவை...

அப்பா : ஏண்டா உனக்கு என்னாச்சு? திடீர்னு வந்து பேர மாத்தச்சொல்ற?
மகன் : ராம் ன்னு என் பேரைச்சொன்னாலே ரீட் ஒன்லி மெமரியா? (ROM) ரெண்டாம் அக்சஸ் மெமரியா (RAM) ன்னு பிரண்ட்ஸ் எல்லாம் கேலி பண்றாங்கப்பா...
*****

கம்பியூட்டர் பக்கத்தில மர வேலை செய்றவர உட்கார வச்சிருக்கியே எதுக்குப்பா?
நீங்கதானே சார் டேபிள் ஒன்று உருவாக்கணும்ன்னு சொன்னீங்க...
*****

டீ கடைல
ஏங்க ஒரு ஹார்ட்டிஸ்க்கில உள்ளத மற்றொரு ஹார்ட் டிஸ்க்குக்கு எப்பிடி காப்பி செய்றது..?
டீ மாஸ்டர் குறுக்கிட்டு..
ஏம்பா.. காபி போடுறது எப்பிடின்னு என்கிட்டே கேட்ட நான் சொல்லமாட்டன..!
*****

2012/07/30

சிரிப்பதற்கு

நாட்டாம : என்றா பசுபதி...
பசுபதி : 1,2,3,4,5,6,7,8....
நாட்டாம : என்றா ...
பசுபதி : அதான் என்றோம்ல...
-------------
 
SMS இற்கு அர்த்தம் தெரியுமா...?
S - சிங்கம் அனுப்ப
M - மங்கி படிக்கும்
S - சிமோல் ஸ்டோரி
-------------

கண்ணா ஒன்னு சொல்றன் நல்லா கேட்டுக்க...
உடம்புல சுகரும் மனசுல பிகரும் இருக்கிறவன்
என்னைக்கும் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்ல..
--------------

2012/07/29

அப்பில் அழுகிறது

 
..அப்பில் அழுகிறது...

வாழைப்பழம் : ஏன் அழுற...?
அப்பில் : எல்லாரும் என்ன வெட்டி வெட்டி சாப்புர்றாங்க...
வாழைப்பழம் : செட்.... நீ என்ன விட பரவால்ல...
அப்பில் : ஏன்..?
வாழைப்பழம் : ஒன்ன சரி வெட்டி வெட்டி சாப்புர்றாங்க...
என்ன ரெஸ்ச கலட்டி வீசிட்டு கடிச்சி கடிச்சி
சாப்புர்றாங்க எனக்கு எவ்வளவு வெக்கமா
இருக்கு தெரியுமா...?