2013/08/28

நோக்கியா மொபைல் ட்ரிக்ஸ் nokia

By pressing x + # (where x is any number) will show the telephone number stored in that particular location.


For example, pressing 125 in idle mode and then pressing "#" later, will show the 125th number stored when the number are entered in your phone-book.

*3370#
Activate Enhanced Full Rate Codec (EFR) - Your phone uses the best sound quality but talk time is reduced my approx. 5%

#3370#
Deactivate Enhanced Full Rate Codec (EFR) OR *3370# ( Favourite )

*#4720#
Activate Half Rate Codec - Your phone uses a lower quality sound but you should gain approx 30% more Talk Time.

*#4720#
Deactivate Half Rate Codec.

*#0000#
Displays your phones software version,
1st Line : Software Version,
2nd Line : Software Release Date,
3rd Line : Compression Type. ( Favourite )

*#9999#
Phones software version if *#0000# does not work.

*#06#
For checking the International Mobile Equipment Identity (IMEI Number). ( Favourite )

#pw+1234567890+1#
Provider Lock Status. (use the "*" button to obtain the "p,w" and "+" symbols).

#pw+1234567890+2#
Network Lock Status. (use the "*" button to obtain the "p,w" and "+" symbols).

#pw+1234567890+3#
Country Lock Status. (use the "*" button to obtain the "p,w" and "+" symbols)

#pw+1234567890+4#
SIM Card Lock Status. (use the "*" button to obtain the "p,w"and "+" symbols).

*#147#
(vodafone) this lets you know who called you last.

*#1471#
Last call (Only vodofone).

*#21#
Allows you to check the number that "All Calls" are diverted to

*#2640#
Displays security code in use.

*#30#
Lets you see the private number.

*#43#
Allows you to check the "Call Waiting" status of your phone.

*#61#
Allows you to check the number that "On No Reply" calls are diverted to.

*#62#
Allows you to check the number that "Divert If Unreachable (no service)" calls are diverted to.

*#67#
Allows you to check the number that "On Busy Calls" are diverted to.

*#67705646#
Removes operator logo on 3310 & 3330
.
*#73#
Reset phone timers and game scores.

*#746025625#
Displays the SIM Clock status, if your phone supports this power saving feature"SIM Clock Stop Allowed", it means you will get the best standby time possible.

*#7760#
Manufactures code.

*#7780#
Restore factory settings.

*#8110#
Software version for the nokia 8110.

*#92702689#
Displays -
1.Serial Number,
2.Date Made,
3.Purchase Date,
4.Date of last repair (0000 for no repairs),
5.Transfer User Data.
To exit this mode you need to switch your phone off then on again. ( Favourite )

*#94870345123456789#
Deactivate the PWM-Mem.

**21*number#
Turn on "All Calls" diverting to the phone number entered.

**61*number#
Turn on "No Reply" diverting to the phone number entered.

**67*number#
Turn on "On Busy" diverting to the phone number entered.

கணினியில் இன்ஸ்டால் செய்துள்ள மென்பொருட்களின் சீரியல் எண்களை காண


நாம் கணினியில் பல கட்டண மென்பொருட்களை நிறுவி இருப்போம். உதாரணமாக OS, மைக்ரோசாப்ட் ஆபிஸ்,போட்டோசாப் போன்ற மென்பொருட்களை நம்முடைய கணினியில் கட்டாயம் நிறுவி இருப்போம். அதை நிறுவும் பொழுது அதற்க்கான சீரியல் எண்களை கொடுத்து இன்ஸ்டால் செய்து இருப்போம். ஆனால் அந்த சீரியல் எண்களை இப்பொழுது நம்மால் பார்க்க முடியாது. ஒருவேளை அந்த சீரியல் எண்களை நாம் குறித்து வைக்காமல் இருந்தால் கணினியில் ஏதேனும் பழுது ஏற்ப்பட்டால் திரும்பவும் நிறுவ அந்த சீரியல் எண் மிகவும் அவசியம். இது போன்ற சூழ் நிலையில் நமக்கு உதவத்தான் இந்த சூப்பரான மென்பொருள் உள்ளது.

  • இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளவும் இதை இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை நேரடியாக இயக்கலாம்.  
  • அந்த மென்பொருளை Extract செய்து பின்னர் அதன் .exe பைலை ஓபன் செய்யுங்கள்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். 
  • அடுத்து Search என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள். அடுத்து இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் Time counter ஓடி கொண்டிருக்கும். முடிந்ததும் ok என்ற பட்டன் வரும் அதை க்ளிக் செய்யவும். 
  • அவ்வளவு தான் உங்களுடைய கணினி ஸ்கேன் ஆகும். ஸ்கேன் ஆகி முடிந்ததும் உங்கள் கணினியில் நிறுவியுள்ள மென்பொருட்களின் சீரியல் எண்கள் தெரியும்.
  • இப்படி உங்களுக்கு கணியில் இன்ஸ்டால் செய்துள்ள மென்பொருட்களின் சீரியல் எண்கள் வரும். 
  • உங்கள் கணினி மட்டுமல்லாது அலுவலகங்களில் உங்கள் கணினியோடு லோக்கல் நெட்வொர்க்கில் இணைந்துள்ள கணினியின் சீரியல் எண்களை பார்த்து கொள்ளலாம்.
  • அதற்க்கு local host என்ற இடத்தில க்ளிக் செய்தால் உங்கள் கணினியோடு இணைந்துள்ள மற்ற கணினியின் சீரியல் எண்களையும் அவர்களின் அனுமதியின்றி பார்த்து கொள்ளலாம்.
  • HKEY_LOCAL_MACHINE என்ற இடத்தில் மாற்றம் செய்தும் மற்ற கணினிகளின் சீரியல் எண்களை பார்த்து கொள்ளலாம். 
  • உங்களுடைய நண்பர்களின் கணினிகளில் நிறுவியும் அந்த சீரியல் எண்களை குறித்து வைத்தும் நீங்களும் பயன்படுத்தி கொள்ளலாம். 
  • இந்த அணைத்து வசதிகளையும் இலவசமாக நமக்கு வழங்குகிறது இந்த மென்பொருள்.
மென்பொருளை டவுன்லோட் செய்ய - Licence Crawler1.6.0.182

DRIVER CD யை தொலைத்துவிட்டீர்களா?

ஒரு இயங்குதளத்தை கணனியில் நிறுவியபின் அடுத்து மிக முக்கியமாக அக் கணணிக்குரிய Driver களை நிறுவ வேண்டும். 

அதுபோலவே எந்த ஒரு வன்பொருள்( Hardware ) சாதனங்களை வாங்கினாலும் கூடவே அதற்கூறிய Driver CD அல்லது DVD தருவார்கள். சில சமயங்களில் நம் Driver CD/DVD தொலைந்து போகக்கூடிய வாய்ப்போ அல்லது பழுதடையக் கூடிய வாய்ப்புக்கள் நிறைய உள்ளது.

அப்படியெனின் இனிமேல் கவலையை விட்டு விடுங்கள். இந்த இணையத்தளம் நமக்கு தேவையான அணைத்து Driver களையும் தருகின்றது. இங்கு சென்று நாம் நமக்கு தேவையான Driver களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

இங்கு
* Printer Drivers
* CDROM Drivers
* Modem Drivers 
* Sound Drivers 
* Mouse Drivers 
* Monitor Drivers போன்றவை......

இங்கு புதிய பழைய என்று அனைத்துவகையான Drivers களையும் நாம் பெற்றுக்கொள்ளலாம். இதனைப் பெறுவதற்கான 

இணையத்தள முகவரி http://members.driverguide.com/index.php .

Funny ஜோக்ஸ்...

மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது... 
கணவன்: அடி செருப்பால! ... உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது? 

---------------------------------------------
அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற? 
மகன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன். 
---------------------------------------------
அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்'ல லைட்டே எரியல? 
மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா! 

-----------------------------------------------
எங்க தலைவர் தண்ணியைச் சிக்கனமா பயன்படுத்துவாரு…
எங்க தலைவரு ‘சிக்கனோட’ பயன்படுத்துவாரு.

------------------------------------------------------------
எதுக்குடா மளிகைக் கணக்கு லாண்டரி கணக்கெல்லாம் உன் நோட்டுல எழுதிக்கிட்டு இருக்கே?
எங்க வாத்தியார்தான் வீட்டுக் கணக்கை எழுதி வரச் சொன்னாருப்பா….

------------------------------------------------------------
உங்க சின்ன பையன் எப்படி அந்த சேரில் ஏறினான்?
அது ‘ஈஸி’ சேராச்சே!

-------------------------------------------------------------
மனைவி:- எங்கிட்ட உங்களுக்கு புடிச்சது என்ன? 
அழகான
 முகமா!!!

அன்பான மனமா!!!
பணிவான குணமா!!
கணவன் :-”உன்னோட இந்த காமெடிதான்”

------------------------------------------------
மாலா:- ஏண்டி கீதா நீ ஏன் துவைக்கிற…
வாஷிங் மெஷின் எங்க? 
கீதா:- அது ஆபீஸ் போயி்ருக்குடி

------------------------------------------------
அப்பா: என்னடா! டெஸ்ட்ல பூஜ்யம் மார்க் வாங்கிட்டு வந்திருக்க?
பையன்: அது பூஜ்யம் இல்லப்பா… வாத்தியார் நான் நல்லா படிச்சதுக்காக “O” போட்டாங்க…

-------------------------------------------------------------
நவீன திருக்குறள்
அகர முதல எழுத்தெல்லாம் தகர
சிலேட்டில் எழுதிப் பழகு.


இன்பத்துள் இன்பம் சொறியின்பம் அவ்வின்பம்
சொரிந்தபின் துன்பம் தரும்.


போடுக தண்ணி போடுக போட்டபின்
ஆடுக அதற்கு தக.

--------------------------------------------------------------
புதிய ‘மா’த்திச்சூடி…
அறஞ் செய இரும்பு
ஆறுவது காபி
இயல்வது பெட்டிங்
ஈவது லஞ்சம்
உதவுவது கடத்தல்
ஊதுவது சிகரெட்
எப்படியும் பணம் சேர்
ஏமாற்றிப் பிழை
ஐஸ் வைக்கக் கற்றுக்கொள்
ஒருவனை (ளை) மட்டும் நேசி
ஓசியில் வாழப் படி.
ஒள… (தெரியலீங்க)

-----------------------------------------------------------
ஒரு ஜவுளிக் கடையில் மனைவிகளை தொலைத்துவிட்ட இரு கணவன்மார்..  கணவன் 1 ; உங்க மனைவி எப்படி இருப்பாங்க..?  
கணவன் 2 ; சிவப்பா, உயரமா, திரிஷா மாதிரி.. ஆமாம் உங்க வீட்டம்மா எப்படி இருப்பாங்க..?  
கணவன் 1 ; அந்தக் கழுதை எப்படி இருந்தா என்ன‌? வா.. உன் பொண்டாட்டியை தேடுவோம்..!!!  

2013/08/27

ATM (Automatic Teller Machine) எப்படி செயல்படுகிறது...?

கட்டுக்கட்டாக பணத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு இப்போதெல்லாம் பஸ்சில் பதட்டப்பட்டுக் கொண்டே யாரும் பயணிப்பதில் லை. காரணம் ஏடி. எம் அட்டைகள்.

வங்கியில் கணக்கை ஆரம்பித்த அ னைவருக்குமே ஒரு அட்டை கிடை க்க தற்போது எல்லா வங்கிகளும் வசதி செய்துள்ளன. எப்போது தே வையோ அப்போது எடுத்துக் கொள் ளலாம் எனும் நிலையும், எல்லா தெருக்களுக்குள்ளும் நுழைந்துவி ட்ட தானியங்கி இயந்திரங்களும் பணத்தை தூக்கிச் சுமக்கும் பணியைகுறைத்திருக்கின்றன.
நாம் பணம் தேவைப்படும் போது ஏ.டி.எம் முன்னால் சென்று நிற்கிறோம், நமது அட்டையை உள்ளே நுழைக்கிறோம். சங்கேத எண் ணை அமுக்குகிறோம். நம்முடைய கட்டளைக்கு ஏற்ப பணம் கிடைக்கி றது. திருப்திப்பட்டு விடுகிறோம்.
Automatic Teller Machine என்பதன் சுருக்கம் தான் ATM. நம் முடைய அட்டையில் 16 எண்கள் கொண்ட ஒரு எண் இருக்கும். இது நம்மைப் பொறுத்தவரையில் ஒரு சாதாரண எண். ஆனால் இதன் ஒவ்வொரு எண்ணிற்கும் தனித்தனி அர்த்தங்க ள் உண்டு.
முதல் ஆறு எண்கள் அட்டை எந்த வங்கியிடமிருந்து பெறப்பட்டிருக்கிறது என்பதைக் குறிக்கும். அத ற்கடுத்த ஒன்பது எண்களும் சே வை வழங்கு நிறுவனங்களின் விருப்பத்தைப் பொறுத்த எல் லைக்குள் இருக்கும். கடைசி எண் ஒரு ரகசிய எண். அதுதான் உங்கள் அட்டை பயன்படுத்தக் கூடியதா இல்லையா என்பதைச் சொல்லும்.
மாஸ்டர்கார்ட் எண்கள் ஐந்து எனும் எண்ணில் ஆரம்பிக்கும், விசா எண்கள் நான்கு எனும் எண் ணில் ஆரம்பிக்கும் என்பது ஒரு சிறு சுவாரஸ்யத் தகவல். அட்டைகளை இரண்டு பெரும் பிரிவாகப் பிரிக்கலாம். ஒன்று கிரடிட் கார்ட் எனப்படும் கடன ட்டைகள். இன்னொன்று டெபி ட் கார்ட் அல் லது செக் கார்ட். கடனட்டையில் நாம் செலவ ழிக்கும் பணத்தை மாதம் ஒரு முறை செலுத்தினால் போது ம். செக் கார்ட் மூலம் செல வழிக்கும் பணம் நம்முடைய வங்கிக் கணக்கிலிருந்து உடனே கழிக்கப்பட்டு விடும்.
ஏடிஎம் முன்னால் சென்று அட்டையை உள்ளே செலுத்தி நம்முடை ய சங்கேத எண்ணைக் குறிப்பி ட்டபின் நமக்கு எவ்வளவு பணம் தேவை என்பதைக் குறிப்பிட்டு பொத்தானை அமுக்குகிறோம். நம் முடைய அட்டையின் பின்னா ல் இருக்கும் மேக்னட்டிக் ஸ்ட் ரைப் நம்முடைய அட்டையின் எண்ணை மென் குறியீடாக்கி உள்ளே அனுப்பும். அதற்குப் பயன் படும் இடம் தான் கார்ட் ரீடர் என ப்படும் நாம் அட்டையை உள்ளே நுழைக்கும் இடம். அப்போது கட்டளை ஏடிஎம் முனையிலிருந்து சுவிட்ச் என அழைக்கப்படும் கணினி மென்பொருளுக்குள் நுழைகிறது. இங்கே இரண்டு வித மான சோதனை வளையங்க ள் இருக்கின்றன. முதலில் நாம் பயன்படுத்தும் அட்டை சரியானதுதானா? அதற்கு நாம் கொடுத்த சங்கேத எண் சரியா னது தானா என்பதைச் சரிபார் க்கும் சோதனை.
இந்தச் சோதனை தோல்விய டைந்தால் நாம் ஏதோ தவறு செய்திருக்கிறோம் என்று பொருள். ஒருவேளை சங்கேத எண்ணை த் தவறா கச் சொல்லியிருக்கலாம்.
இரண்டாவது சோதனை நம்முடைய வங்கிக்கணக்கில் நாம் கேட் கும் பணம் இருக்கிறதா? நான் பணம் எடுப்பதில் இன்றைய தினத்தின் உச்ச வரம்பை எட்டி யிருக்கிறோமா ? என்பது குறித்த சோத னைகள். முதல் சோதனை முடிந்தபின், இரண்டாவது சோதனைக் குள் நுழைந்து இரண்டும் சரியாய் இருந்தால் பணம் கொடுக்கலாம் எனும் பதில் தானியங்கி முனைக்கு வரும். இந்த இரண்டு சோத னை களையும் கடக்க பல இலட்சம் தக வல்கள் அடங்கியிருக்கும் மென் கோப்பு களில் தேடுதல் நடக்கும்.
இந்த தேடுதல் முடிந்து தானியங்கி முனைக்கு வரும் தாமதம் சில வினாடிகளே. இந்த வினாடிகள் அதிகரிக்கும் போது தான் நாம் சலித்துக் கொள்கிறோம்.
பணத்தை எண்ணித் தரும் பண ம் பட்டுவாடா இயந்திரமும் நுட் ப மான சென்சார்களால் ஆனது. இது தவறு இழைப்பதில்லை. இரண்டு நோட்டுகள் ஒட்டி வரு ம் எனும் ஆசை நப்பாசையாய் போய்விடும் என்பது திண்ணம்.
இன்னொரு சுவாரஸ்யமான வி ஷயமும் அடங்கியிருக்கிறது. நாம் நம்மிடம் ஒரு வங்கியின் அட் டை இருந்தாலும் வேறு வங்கியின் தானியங்கி நிலையமும் நம க்குக் பணம் கொடுக்கும். எப்படி ?
இதை செட்டில்மண்ட் என்பார்கள். அதாவது வங்கிகள் எந்தெந்த வங்கி அட்டைகளுக்குப் பணம் கொடுக்கிற தோ அந்தந்த வங்கிகளின் கணக்கி ல் அந்தப் பணத்தைச் சேர்த்துக் கொ ள்ளும். அன்றைய தினத்தின் இறுதி யில் வங்கிகள் மற்ற வங்கிகளுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என் பதை கணக்கிட்டு உடன்பாடு செய்து கொள்கின்றன.
மின் பண பரிமாற்றம் எனப்படும் இந்த தொழில்நுட்பம் மிகவும் சிக்க லானதும், பணம் ஈட்டக் கூடியதுமாகும். பல முன்னணி மென் பொருள் நிறுவனங்கள் இதை நடத்துகின்றன. சரி, மென்பொருள் நிறுவனங்க ளுக்கு இதனால் எப்படி காசு கிடைக்கிறது? இந்த தானியங் கி நிலையத்திலிருந்து செல்லு ம் கட்டளைகள் மென்பொரு ளோடு இணையாவிடில் ஒன்று க்கும் உதவாது. இதன் பின்னால் இருக்கும் மென்பொருள்தான் வரும் தகவல்களைச் சரிபார்த் தல், பணம் பட்டுவாடா செய்ய உத்தரவிடுதல், மீதம் கணக்கிடு தல் என ஒட்டுமொத்தப் பணியையும் செய்கிறது. அனைத்து விவரங் களையும் மென் கோப்புகளில் சேமித்தும் வைக்கிறது. இந்த சுவிட்ச்
எனப்படும் இந்த மென்பொரு ளுக்குள் வரும் தகவல்கள், அல்லது விண்ணப்பங்களு க்கு ஏற்ப மென்பொருள் நிறு வனம் வங்கிகளிடம் பணம் பெற்றுக் கொள்கின்றன.
அதாவது நீங்கள் பத்து முறை பணம் எடுக்கிறீர்கள் என்றா ல் மென் பொருளுக்குக் கி டைப்பது பத்து தகவல்கள். ஒவ்வொரு தகவலுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை மென்பொருள் நிறுவனத்துக்குச் செல்லும். தினமும் பலஆயிரக்கணக்கான தானியங்கி களில் நிகழும் இந்த பரிவர்த்த னை மூலம் பல கோடிக்கணக் கான பணம் மென்பொருள் நிறு வனங்களுக்குப் போய் சேர்கிற து. இதற்காகத் தான் ஆயிரக்க ணக்கான மென்பொறியாளர் கள் பணியாற்றுகின்றனர். அதி லும் ஒவ்வொரு வங்கிக்கும் உ ரிய பிரத்தேக சட்டங்களின் அடி ப்படையில் மென்பொருள் இய ங்குவது தான் முக்கியம். குறிப்பாக சில வங்கிகள் ஒரு நாள் பத் தாயிரம் ரூபாய் மட்டுமே
ஏடிஎம் வழியாக எடுக்க அனு மதிக்கும். சில வங்கிகள் ஐம் பதாயிரம் ரூபாய் வரை அனு மதிக்கும். இதற்குத் தக்க படி மென்பொருள் தயாராக்கப்பட வேண்டும்.
அமெரிக்காவில் இருபத்து ஐந்திற்கும் முப்பத்து நான்கிற் கும் இடைப்பட்ட வயதுடைய வர்களில் அறுபது சதவீதம் பேர் மாதம் எட்டு முறை ஏடிம் இயந் திரத்தைப் பணம் எடுக்க நாடுகிறார்களாம். பெரும் பாலான ஏடிஎம்நிலையங்களில் வெள்ளிக் கிழமைகளில் தான் அதிக பரி வர்த்தனை நடக்கிறதாம்.
ஏடிஎம் அட்டையைப் பயன்ப டுத்துபவர்கள் மற்றவர்களை விட இருபது முதல் இருபத்து ஐந்து சதவீதம் வரை அதிகமா கச் செல வழிக்கிறார்களாம்.
ஏடிஎம் அட்டைக்கு மிக முக் கியமானது பின் எனப்படும் சங்கேத எண். இது தானியங்கியில் அளி க்கப்பட்டவுடன் குறியீடுகளாக மாறிவிடும். அதன்பின் யாரும் அதை திருட முடியாது.
ஆனால் அது நம்மிடம் இருக்கு ம் வரை அதை நாம் தான் பாது காக்க வேண்டும். இல்லை யேல் இழப்பு நமக்கு தான். அட் டையும் எண்ணும் கிடைத்து விட்டால் யார் வேண்டுமானா ல் நம் வங்கிக்கணக்கி லிருந்து பணம் எடுக்க முடியும். இணை யத்திலும் பொருட்கள் வாங்க முடியும்.
சங்கேத எண்ணை பத்திரமாய் வைத்திருக்க சில விஷயங்களைக் கவனத்தில் கொண்டால் போதும். சங்கேத எண்ணை எழுதி வைக்கக் கூடாது. மறந்து விடுவோம் எழுதியே ஆகவேண்டும் என விரும்பி னால் அதை வீட்டில் எங்காவ து பத்திரமாய் எழுதி வைக்க வேண்டும்.
பர்சிலோ, ஏடிஎம் அட்டை இருக்கும் இடங்களிலோ வை க்கவே கூடாது. சங்கேத எண் உங்களோடு தொடர்பற்றவையாக ஆனால் உங்க ளால் மறக்க முடியாததாக இருக் க வேண்டும். குறிப்பாக உங்கள் பிறந்த நாள், தொலைபேசி எண் போன்றவை இல்லாமல் இருத்தல் நலம். சங்கேத எண்ணை எழுதி வைக் கும்போது கூட அதை உங்களு க்கு மட்டுமே புரியும் சங்கேத மொழியிலேயே எழுதி வைக்க லாம்.
சங்கேத எண்ணை பயன்படுத்தும் போது தானியங்கிக்கு மிகவும் அருகாக குனிந்து மற்றவர்கள் பார்க்காத படி எண்களை பயன்படுத்தவேண்டும். குனிந்தபடி எண் ணை பயன்படுத்துவது ரகசி யக் காமராக்களிடமிருந்து பெரும்பாலும் தப்ப வைக்கு ம்.
பணம் எடுத்ததும் உடனே பா க்கெட்டில் பாதுகாப்பாக வை த்துவிட்டு சென்று விடுங்கள். வீட்டில் சென்று எண்ணிப் பாருங்கள். எப்படியானாலும் தவறு நிகழ்ந்தால் அதை சம்பந்தப்பட்ட வங்கிக்குத் தான் தெரியப்படுத்த வேண்டும் எனவே தானியங்கி முன் னால் நின்று எண்ணிக்கொண்டி ருப்பது தேவையற்றது.
யாராவது உங்களைத் தாக்கக் கூடும் எனும் பயம் தோன்றினால் ”கேன்சல்” பட்டனை அமுக்கி விட் டு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கிளம்புங்கள்.
இரவு நேரங்களில் ஏடிஎம் பய ன்படுத்த வேண்டியிருந்தால் ஆள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இடங்களிலுள்ள ஏடிஎம் களைப் பயன்படுத்துங்கள்.
முக்கியமாக அட்டையின் பின் னால் இருக்கும் தொலைபேசி எண் ணை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அட்டை தொ லைந்ததை அறிந்தால் உடனே அந்த எண்ணுக்குத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவியுங் கள். உடனே உங்கள் அட்டை யின் எண் ”ஏமாற்று” வரிசையி ல் சேர்க்கப்படும். அதன்பின் அந் த அட்டையை யாராவது பயன் படுத்தினாலும் அது ”ஏமாற்று வேலை” என்னும் முத்திரை இருப்ப தால் நிராகரிக்கப்படும்.

பென்ட்ரைவில் /எக்ஸ்டெர்னல் ஹாட்டிஸ்கில் காணாமல் போன போல்டர்களை மீட்டெடுத்தல்...

பென் ட்ரைவ் மற்றும் எக்ஸ்டெர்னல் ஹார்டிஸ்க் ஆகியவற்றை நாம் தினசரி அலுவல் நிமித்தமாகவும், தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவும் பல கணினிகள் மற்றும் மடிக்கணினிகளில் பயன் படுத்தி வருகிறோம். இவ்வாறான பயன்பாட்டில் நம்மை அறியாமலேயே சில சமயங்களில் வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதலுக்கு உள்ளான கணினிகளில் பயன்படுத்தும் நிலை உண்டாகி விடுவது இயல்புதான். 


பெரும்பாலும் நமது அதி முக்கியமான கோப்புகள் (புகைப்படங்கள், பல நாட்கள் செலவழித்து உருவாக்கிய ஆவணங்கள்)  அனைத்தையும் பென் ட்ரைவ்களில்தான் வைத்திருப்போம். மால்வேர் தாக்குதல்களுக்கு உள்ளான கணினிகளில் இவற்றை பயன் படுத்திய பிறகு, நமது பென் ட்ரைவை சோதித்துப் பார்த்தால், நாம் அதில் வைத்திருந்த ஃபோல்டர்கள் அனைத்தும் காணாமல்  போய், வெறும் 1 KB மட்டுமே அளவுள்ள  அவற்றின் ஷார்ட்கட்கள் மட்டுமே இருப்பதைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கலாம். 

ஒரு சிலர், பென் ட்ரைவில் உள்ள அனைத்தும் போய்விட்டது என்று எண்ணி ஃபார்மெட் கூட செய்திருக்கிறார்கள். பல நாள் உழைப்பு வீணாகிவிட்டதே என்றெண்ணி தலையில் கைவைத்து அமருவதை விட, கொஞ்சம் சிந்தித்தால் போதும் இழந்ததாக கருதிய கோப்புறைகளை மீட்டெடுத்து விடலாம். 
முதலில் நாம் செய்ய வேண்டியது, நமது பென் ட்ரைவ் அல்லது எக்ஸ்டர்னல்  ட்ரைவ் லெட்டரை அறிந்து கொண்டு (உதாரணமாக G: ), ஸ்டார்ட் மெனுவில் ரன் கட்டளைக்கு சென்று CMD என டைப் செய்து DOS prompt இற்கு செல்லுங்கள். அங்கு ட்ரைவ் லெட்டரை டைப் செய்து (G:) என்டர் கீயை அழுத்தி,  அந்த குறிப்பிட்ட ட்ரைவிற்கு செல்லுங்கள். அங்கு DIR/AD என டைப் செய்து என்டர் கீயை அழுத்த, நமது ட்ரைவில் உள்ள அனைத்து ஃபோல்டர்களும் (நாம் இழந்ததாக கருதிய) hidden வடிவில் மறைக்கப்பட்டிருப்பதை காணலாம். 

இவற்றை எப்படி மீட்டெடுக்கலாம்? 
இதே DOS prompt -ல் இருந்து கொண்டு, Attrib -r -s -h /s /d G:*.* என்ற கட்டளையை கொடுங்கள். அவ்வளவுதான் உங்கள் கோப்புறைகள் மீட்கப்பட்டன.  பிறகு தேவையற்ற ஷார்ட்கட்கள், மற்றும் வைரஸ் என சந்தேகிக்கப்படும் கோப்புகள் அனைத்தையும் டெலிட் செய்து விடுங்கள். 

டாஸ் கட்டளைகளை பயன்படுத்த தயங்குபவர்கள் கீழே உள்ள சுட்டியிலிருந்து பேட்ச் பைலை தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ளலாம். 
ஆக்கம்: பரினாஸ் 

Dongle ஐ Unlock செய்வது எப்படி.?

இணையச்சேவை வழங்குனர்களின் (Airtel, Mobitel ,Dialog, Etisalat) Dongle இனை நாம் வாங்கினால் அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் பாவிக்க இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள்.நாம் வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும்.அதில் சரியான Code இனை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle , Unlock செய்யப்பட்டு விடும்.சரி இந்த Unlock Code இனை எப்படி கண்டுபிடிப்பது?

முதலில் உங்களுடைய Dongle இன் 15 இலக்கத்தை கொண்ட IMEI Number ஐ கண்டுபிடியுங்கள்.இது Dongle இன் பின் புறத்தில் காணப்படும்.


இதை http://www.bb5.at/huawei.php?imei=*************** அப்படியே Copy  செய்து, இதில் இருக்கும் * இற்கு பதிலாக உங்களுடைய  IMEI Number யை கொடுத்து Address Bar  இல் Paste செய்து கொள்ளுங்கள். 





இப்போது உங்களுடைய Dongle இற்குறிய Unlock Code கிடைக்கும்.


அதை அப்படியே Copy  செய்து விட்டு, வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle இற்குல் போடுங்கள்.உங்களிடம் Unlock Code கேட்கும், அந்த இடத்தில் Paste செய்து கொள்ளுங்கள் Unlock ஆகிவிடும்.
ஆக்கம்: பரினாஸ் 

2013/08/25

கொஞ்சமாவது சிரிங்கப்பா..

பரிட்சை எழுதிய மாணவன், பதில் பேப்பருடன், 100 ரூபாய் நோட்டை இணைத்து, “ஒரு மார்க்குக்கு ஒரு ரூபாய்” என குறிப்பும் எழுதி அனுப்பினான்.
தேர்வுத் தாளைத் திருத்தியவரோ ஒரு சர்தார்ஜி.

பேப்பரைத் திருத்தியதும், அவர் 81 ரூபாயை அத்துடனேயே இணைத்து, இப்படி எழுதி அனுப்பினார்.
“நீ 19 மார்க் வாங்கியிருக்கே… மீதி சில்லறையை பத்திரமா வச்சுக்கோ…”
-----------------------------------------------
 பில்கேட்சுக்கு கடிதம் எழுதினார் சர்தார்ஜி
மதிப்பிற்குரிய பில்கேட்ஸ்,
என் வீட்டு உபயோகத்துக்காக ஒரு கம்ப்யூட்டர் வாங்கினேன். அதில் சில பிரச்னைகள் இருப்பதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.
1. அதில் ஸ்டார்ட் பட்டன் இருக்கிறது. ஆனால் ஸ்டாப் பட்டன் இல்லை. சரிபார்க்கவும்.
2. உங்கள் கம்ப்யூட்டரில் ரீசைக்கிள் என இருக்கிறது. என்னிடம் ஏற்கனவே ஒரு சைக்கிள் இருப்பதால் ரீஸ்கூட்டர் கிடைக்குமா?
3. எனக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியும். மைக்ரோசாஃப்ட் வேர்டுக்குப் பதிலாக, மைக்ரோசாஃப்ட் சென்டென்ஸ் படிக்க வழி உண்டா?
4. கம்ப்யூட்டரில் மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் இருக்கிறது. நான் வீட்டில் உபயோகிப்பதால், மைக்ரோசாஃப்ட் ஹோம் கிடைக்குமா?
கடைசியாக ஒரு சொந்தக் கேள்வி
உங்கள் பெயரில் “கேட்ஸ்” இருக்கிறது. ஆனால் நீங்களோ “வின்டோஸ்” விற்கிறீர்கள். ஏன் இந்த முரண்பாடு?
---------------------------------------------
கிரிக்கெட் மேட்ச் பற்றிக் கட்டுரை எழுதச் சொன்னாராம் டீச்சர்.
எல்லா மாணவர்களும் பரபரப்பாக எழுதிக் கொண்டிருக்க, சர்தார்ஜி மாணவன் இப்படி எழுதிக் கொடுத்தானாம்…
“மழையின் காரணமாக கிரிக்கெட் மேட்ச் கன்சல் செய்யப்பட்டது…”
----------------------------------------------
ஹொட்டல் முதலாளி: ஏன் சார், தினமும் பார்சல் வாங்கறீங்க… ஒருநாளாவது இங்கயே சாப்பிடலாமில்லே..?
சர்தார்ஜி: டாக்டர் என்னை ஹொட்டல்ல சாப்பிடக்கூடாதுனு சொல்லிருக்காரு. அதான்!
---------------------------------------------
செல்போன் டவர்களையும், அதில் ஒளிரும் சிகப்பு விளக்குகளையும் பார்த்த சர்தார்ஜிக்கு ஒரே பூரிப்பு. சந்தோஷத்தில் இப்படிக் கத்தினாராம் அவர்.
“இந்தியா எவ்ளோ வேகமா முன்னேறிட்டு வருது… ஏரோபிளேன் போகறதுக்குக் கூட, உயரத்துல எப்படி டிராஃபிக் சிக்னல் வச்சிருக்காங்கப்பா!”
---------------------------------------------
டாக்டர்: நீங்க இவரை 1 மணி நேரம் முன்னாடி கொண்டு வந்திருந்தீங்கன்னா காப்பாத்தியிருக்கலாம்…
நோயாளியின் உறவினர்: அதுக்கென்ன செய்ய? இவங்களுக்கு ஆக்சிடென்ட் நடந்தே கால்மணி நேரந்தானே ஆச்சு?
---------------------------------------------
கடவுளுக்கு ஒருநாள் திடீர் ஆசை. மது அருந்த விரும்பி, பாருக்குப் போகிறார். முதலில் 5 பாட்டில் விஸ்கி, அடுத்து 5 பாட்டில் ரம், பிறகு 5 பாட்டில் ஒயின் என வரிசையாகக் குடிக்கிறார். அவரைப் பார்த்த பார் கடைக்காரருக்கோ ஆச்சரியம்.
கடைக்காரர்: “பொதுவா ரெண்டு ஃபுல் அடிச்சாலே, எல்லாரும் ஃபிளாட் ஆயிடுவாங்க. உனக்கு மட்டும் எப்படி இன்னும் போதையே ஏறலை? யார் நீ?” எனக் கேட்கிறார் கடவுளிடம்.
கடவுள்: “நான்தான் கடவுள்” என்கிறார் அவர்.
கடைக்காரர்: “தோடா… இப்பதான் மப்பு ஏற ஆரம்பிச்சிருக்கு” என்று சிரித்தார் கடைக்காரர்.
--------------------------------------------

2013/08/06

கொஞ்சம் சிரிப்போமே....

கல்யாணம் பண்ணிக்க சொல்லி உன் பின்னாடி பொண்ணுங்களா அலையுதுன்னு சொல்லி ஏதோ பயங்கரமா பில்டப் கொடுக்கிறீயே.. அதில ஏதாவது 2 பொண்ண பத்தி சொல்லு...
ஒண்ணு எங்க அம்மா.. இன்னொன்னு எங்க பாட்டி.
------------------------------------------------------------------------------------------------------



நீ‌‌திப‌தி : ‌நீ‌ங்க‌ள் யாரை‌த் திருமணம் செய்து கொண்டிருக்‌கி‌றீ‌ர்க‌ள்?
ஆ‌ண் : ஒரு பெண்ணை.
‌நீ‌திப‌தி : பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள்?
ஆ‌ண்: ஏ‌ன் செ‌ய்து கொ‌ள் மா‌ட்டா‌ர்க‌ள். என் தங்கை ஒரு ஆணைத்தான் திருமணம் செய்து கொண்டிருக்கிறாளே!!!.
--------------------------------------------

நேத்து நான் என் மனைவியை முட்டி போட வெச்சிட்டேன்!
நிஜமாவா, எப்படி?
அவ என்னை அடிக்க வரும்போது நான் கட்டிலுக்கு அடியிலே போய் ஒளிஞ்சிகிட்டேன்!’…
--------------------------------------------------------------------

வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போது, குரங்கு ஒன்று உள்ளே வந்துவிட்டது …
ஆசிரியர் மாணவர்களிடம் : யாருடா .. இது, நியூ அட்மிஷனா ?
மாண்வர்கள் ஆசிரியரிடம் : இல்ல சார், நியூ அப்பாய்ன்மென்டு…. ன்னு தோணுது…
--------------------------------------------------------------------

நோயாளி : டாக்டர் ..! எனக்கு தினமும் 16 மனி நேரம் தூக்கம் வருது..! அதுக்கு அலுப்பு தானே காரணம் ..?
டாக்டர் : அதுக்கு காரணம் அலுப்பு இல்ல..! ” கொழுப்பு”..
-------------------------------------------------------------------

அந்த கதாசிரியர் எந்த நேரமும் காதுல பஞ்சு வச்சுக்கிட்டு எழுதுராறே ஏன்?
சூ, சத்தம் போடாதே! அவர் பஞ்சு டயலாக் எழுதுராரு!
--------------------------------------------------------------------



மிருகக் காட்சி சாலையில் புலி ஒன்று, பார்வையாளரில் ஒருவனைக் கொன்றுவிட்டது. அதைக் கண்டு பக்கத்து கூண்டில் இருந்த குரங்கு புலியைப் பார்த்துக் கேட்டது
குரங்கு: ஏன் அவனைக் கொன்னே?!
புலி : அந்தப் பரதேசி நாய் மூணு மணி நேரமா என்னைப் பார்த்துச் சொல்றான் “எவ்ளோ பெரிய பூனைன்னு”
--------------------------------------

நண்பன்: ஏண்டா ஜானி உன்னை ப்ரின்சிபால் திட்டினார்?
ஜானி: ப்ரின்சிபால் அவரோட நாயை காணவில்லைன்னு நியூஸ் பேப்பர்ல விளம்பரம் கொடுக்க சொன்னாரு! நான் ப்ரின்சிபால் நாயைக்காணோம்னு விளம்பரம் கொடுத்திட்டேன்!!
----------------------------------------------

ஒரு கணினியில் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட Skype கணக்குகளை Log In செய்வது எப்படி ?



பேஸ்புக்கில் நேரடியாக தமிழில் டைப் செய்வது எப்படி?

Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi மூலமாக பகிர்வது எப்படி?

2013/08/05

பவர்பாய்ண்ட் கோப்புகளை வீடியோவாக மாற்ற . . .

மைக்ரோசாப்ட்டின் ஆபீஸ் (MS Office) தொகுப்பில் உள்ள பவர் பாய்ன்ட் செயலியை நம்மில் பலர் பயன்படுத்தி வருகிறோம். 

எளிதாக தகவல்களை தொகுத்து animation வேலைகளுடன் வழங்க இந்த பவர்பாய்ண்ட் நமக்கு உதவுகிறது. இதிலுள்ள பயன் பாடுகள் ஏராளமானவை.

ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், தனியா ர் நிறுவன ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த பவர் பாய்ண் ட்டை அதிகம் பயன்படுத்துகிறார் கள். வகுப்புகளில், கருத்தருங்கு களில் என எல்லாவற் றிலும் இந்த பவர்பாய்ண்ட் ப்ரசண்ட் டேஷனைப் பயன்படுத்திதான் தங்களது கருத்துகளை எடுத்து கூறுகின்றனர். பாடம் நடத்தவும் சில வேளைகளில் பவர்பாய்ண்ட் பிரசன்ட்டே ஷன் உதவுகிறது என்றால் அது மிகையாகாது.

இவ்வாறு பவர்பாய்ன்ட் மூலம் உருவாக்கிய கோப்புகளை மற்ற கணினிகளில் வேலை செய்ய வைக்க அந்த கணினிகளில் பவர் பாய்ன்ட்(Powerpoint application) அல்லது பவர்பாய்ன்ட் வியுவர் (Powerpoint viewer) இருந்தால்தான் பவர்பாய்ண்ட் கோப்புகளை (power point presentation) காண முடியும். இவற்றையே வீடியோ கோப்புக ளாக மாற்றிவிட்டால் உங்கள் வீட்டு டி.வியில் கூட பவர்பாய்ண்ட்டில் உருவா க்கிய கோப்புகளை காண முடியும். அதாவது டிவிடி பிளேயர், CD Player போன்ற பிளேயர்களில் உள்ளிட்டு அவற்றை டிவியில் பார்க்க லாம். பவர்பாய்ண்ட் கோப்புகளை வீடியோ கோப்புகளாக(Video files) மாற்ற பவர் பாய்ண்ட்டில் வசதி தரப்படவில்லை. எனவே பவர் பாயிண்ட்டில் வீடியோவாக மாற்றுவது என்பது இயலாத காரியம். இதற்காகவே இந்த மென்பொருள் பயன்படுகிறது. மென்பொருளின் பெயர்Leawo PowerPoint to Video Free.

இந்த இலவச மென்பொருள் மூலம் நீங்கள் எளிதாக உங்கள் பவர் பாய்ண்ட் கோப்புகளை வீடியோ கோப்புகளாக மாற்றம் செய்ய முடியும். உங்கள் பவர்பாய்ன்ட் கோப்புகளை 3PG, 3G2, ASF, WMV, ஆகிய பார்மட்களில் வீடியோ கோப்புகளாக மாற்றிக்கொள்ள லாம்.

இந்த மென்பொருளைத் தரவிறக்க சுட்டி:Download Leawo PowerPoint to Video Free.

இந்தமென்பொருளானது பவர்பாய்ண்ட்டின் அனைத்துவித கோப் புகளையும் ஆதரிக்கிறது(Support). PPT, POT, PPTX, PPS போன்ற பவர்பாய்ண்டின் எந்த வகையான கோப்பாக இருந்தாலும் இம் மென்பொருள் மூலம் வீடியோவாக மாற்ற முடியும்.

மேலும் பவர்பாய்ண்டில் நாம் உருவாக்கிய அனைத்து அனிமே ஷன்களும், வீடியோவாக மாற்றம் செய்தபிறகு அப்படியே வேலை செய்யும் என்பது இம்மென்பொருளின் கூடுதல் சிறப்பு.

என்ன நண்பர்களே… இந்த மென்பொருளைத் தரவிறக்கி உங்கள் பவர்பாய்ண்ட் கோப்புகளை வீடியோவாக மாற்ற தயாராகி விட்டீ ர்களா?…

உங்கள் பவர்பாய்ண்ட் ஆக்கங்களை இனி உங்கள் வீட்டு டிவி யிலும் போட்டுக் காண்பித்து பெருமைப்பட்டுக்கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகளுக்குத்தேவையான PowerPoint Presentation நீங்களே உருவாக்கி வீடியோவாக மாற்றி CD பதிவேற்றிக் கொடு ங்கள். அவர்களுக்கும் அது பயனுள்ளதாக இருக்கும்.