2013/07/13

வட கிழக்கில்...


பிரிந்து  விட்ட  ஆத்மாக்களும்
பிரியாத பல நினைவுகளும்
குண்டுகளின் வடுக்களைப் பார்த்து
கண்ணீ ர்  விடுகின்றன...

இனங்கள் வேறென்றாலும்
இறைவன் ஒன்றுதான்
இது தெரியாத இதயங்களே
இன்று இனவாதம் பேசுகின்றன...

அடர்ந்த காடுகளில்
அவரவர் அணிந்திருந்த
ஆடைகளும்
ஆயுதங்களும்
அலை கடலாய் அணிதிரள
அதிசயம் அங்கே
உயிரற்ற உடல்கள் சிந்தும்
குருதியெல்லாம் சிவப்பே...

செத்த பின்
சோனி என்ன
தமிழன் என்ன
சிங்களவன் என்ன
இழுத்துப் போட்டு மூடினால்
இதயங்களால் ஆயுதங்களை
இழுக்கத்தான் முடியுமா...

மறையளித்த இறைவனைத் துதித்து
மறைய வேண்டிய உயிர்கள்
மறைவிலிருந்து வரும் வெடி வாங்கி
மரணிப்பதுதான் கொடுமை
இதுதான் வடகிழக்கின் வழமை...
***
2001