2013/07/18

எதற்காக....


கட்டுரை  எழுதுகின்றேன்
புகழ் பெறுவதற்காக அல்ல
சமூகத்தை விழிப்படுத்துவதற்காக

புத்தகம் படிக்கிறேன்
வாசகன் ஆவதற்காக அல்ல
உலகை அறிவதற்காக

ஊர் சுற்றுகிறேன்
காதலிப்பதற்காக அல்ல
நிருபராவதற்காக

கடிதம் எழுதுகின்றேன்
நண்பனுக்காக அல்ல
நயவஞ்சகனை அறிவதற்காக

கவிதை எழுதுகின்றேன்
கவிஞன் ஆவதற்காக அல்ல
காதலில் தோற்றதற்காக

பாட்டுப் படிக்கின்றேன்
பாடகனாவதற்காக அல்ல
காதல் துயரத்தை களைவதற்காக

இவை எல்லாம் ஏட்டில் எழுதுகின்றேன்
என்னைத் தெரிவிப்பதற்காக அல்ல
என்னை நான் அறிவதற்காக...
***
2011

சோடிப் பொருத்தம்...


வானவில்லின் வர்ணங் குழைத்து -என்
விதியில் எழுதுகின்றேன் உன்னை

பெண்ணே....
முள்ளில்லா ரோஜா - நீ
முடியில்லா  ராஜா - நான்

வறுமையில் வதங்கியவள்  - நீ
வெறுமையில் வாழ்ந்தவன் - நான்

முத்தாய் சிரிப்பவள் - நீ
சித்தாய் அலைபவன் - நான்

சிந்திக்க வைக்கும் பேதை - நீ
சரித்திரம் படைத்த காளை - நான்

அன்ன நடை கொண்டவள் - நீ
அன்னம்  உனக்கிட அவதரித்தவன் - நான்

இலக்கிய கவிதாயினி - நீ
இலக்கணமற்ற கவித்திடல் - நான்

ஆதலால்
என் விதியில் எழுதினேன் - உன்னை
ஏற்றிடுவாய் உன் வாழ்வில்  நீ - என்னை...

சோடிப் பொருத்தமோ - சூப்பர்
சேர்த்துத்தான்  வைப்பாரோ  உன் - அப்பர்...?
***
2011