2014/07/21

ஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிர்

  1. பூச்சியம் தொடக்கம் பத்திற்குள் (0-9) ஏதாவது ஒரு எண்ணை நினைக்கவும் உ+ம் 7
  2. அவ் எண்ணை இரண்டால் பெருக்கவும் -   இங்கு 7*2=14
  3. அத்துடன் 5 ஐக் கூட்டவும்  – 14+5=19
  4. பின் வரும் விடையை 5 ஆல் பெருக்கவும் -   19*5=95. இவ் விடையை எழுதி வைக்கவும்.
  5. இரண்டாவது எண்ணாக பூச்சியம் தொடக்கம் பத்திற்குள் (0-9) இன்னொரு ஒரு எண்ணை நினைக்கவும் உ+ம் 4
  6. இரண்டாவது  நினைத்த எண்ணை (படி 4 இல் ) எழுதி வைத்த எண்ணுடன் கூட்டவும். எனவே 95+4=99
  7. விடையை கூறவும்
நினைத்த இரு எண்களையும் கண்டுபிடிப்பதற்கு
  • கடைசி விடையிலிருந்து 25 ஐக் கழிக்கவும் 99-25=74
  • இங்கு முதல் எண்  நீங்கள் நினைத்த முதல் எண்ணும் இரண்டாவது மற்றைய எண்ணுமாகும்.

அறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்

இது ஏறத்தாள 1400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புதிர். கணணியோ கல்கியுலேட்டரோ சமன்பாடுகளோ அற்ற காலம். அறிவு மேதை அலி (ரழி)யின் அறிவுத் திறமை மீது பொறாமைக் கொண்ட முஷ்ரிக் ஒருவன் அவரை சபையோர் முன் அவமானப் படுத்தும் நோக்கில் திடீரென ஒரு கடினமான புதிரை தொடுத்தான். அவன் அவரைப் பார்த்து

” ஒன்று முதல் பத்து வரை உள்ள எண்களில் எந்த எண்ணாலும் பிரிக்கும் போது மீதி வராத எண் எது?”

தற்காலத்தில் இலகுவாக 1*2*3*4*5*6*7*8*9=362880 எனலாம், ஆனால் அறிவு மேதை அலி (ரழி) அவர்களோ சட்டென இலகுவாக வேறொரு விடை அழித்தார்கள்

விடை 

அவர் அவனைப் பார்த்து ஒரு வருடத்தில் உள்ள நாட்களை கிழமையில் உள்ள நாட்களால் பெருக்க உமக்கு விடை கிடைக்கும் என்றார்.  இவ் விடையைக் கேட்ட  முஷ்ரிக் திகைத்து விடையை கணக்கிட்டு சரி பார்த்தான். அதாவது இஸ்லாமிய சந்திர வருட கணக்குப் படி வருடத்திற்கு 360 நாட்கள், கிழமையில் ஏழு நாட்கள். எனவே
360*7=2520 விடை ஆகும்.
2520 ÷ 1 = 2520
2520 ÷ 2 = 1260
2520 ÷ 3 = 840
2520 ÷ 4 = 630
2520 ÷ 5 = 504
2520 ÷ 6 = 420
2520 ÷ 7 = 360
2520 ÷ 8 = 315
2520 ÷ 9 = 280
2520 ÷ 10= 252 !!!!!