2014/03/22

இன்றைய எனது ஜனனம்...

கடலலைகள் கரையை
தொடுவதைப் போல்
எம் இனிய நினைவுகள்
என் நெஞ்சை தொடும் வேளை
ஒவ்வொரு நிமிடங்களும்
ஒரு லீப் வருடமாக
என் இதயம் கனக்கிறது...

நாட்கள் பிறக்கும் போது
நான் மரணிப்பதாகவும்
நாட்கள் மறையும் போது
நான் பிறப்பதாகவும்
என்னுள் ஒற்று எண்ணம்...

அந்த எண்ணத்தை வருட
அறிந்து கொண்டேன் - என்
அவளுடன் பேசிடும்
அந்த இனிய மாலைப் பொழுதுகளே
என் பிறப்பின் அர்த்தங்களும்
என் சந்தோசங்களும்...
*****