2013/07/18

சோடிப் பொருத்தம்...


வானவில்லின் வர்ணங் குழைத்து -என்
விதியில் எழுதுகின்றேன் உன்னை

பெண்ணே....
முள்ளில்லா ரோஜா - நீ
முடியில்லா  ராஜா - நான்

வறுமையில் வதங்கியவள்  - நீ
வெறுமையில் வாழ்ந்தவன் - நான்

முத்தாய் சிரிப்பவள் - நீ
சித்தாய் அலைபவன் - நான்

சிந்திக்க வைக்கும் பேதை - நீ
சரித்திரம் படைத்த காளை - நான்

அன்ன நடை கொண்டவள் - நீ
அன்னம்  உனக்கிட அவதரித்தவன் - நான்

இலக்கிய கவிதாயினி - நீ
இலக்கணமற்ற கவித்திடல் - நான்

ஆதலால்
என் விதியில் எழுதினேன் - உன்னை
ஏற்றிடுவாய் உன் வாழ்வில்  நீ - என்னை...

சோடிப் பொருத்தமோ - சூப்பர்
சேர்த்துத்தான்  வைப்பாரோ  உன் - அப்பர்...?
***
2011