2013/12/10

அறுவை ஜோக்ஸ்

சோமு: வரதட்சணையே வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது என் மனசை உறுத்திக்கிட்டே இருக்குது!
ராமு: அதனால...
சோமு: வரதட்சணையே வாங்காம இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு பிராயச்சித்தம் செய்யப் போறேன்.
*****

ஆசிரியர்: மூண்றாம் உலகப் போர் வந்தால் என்ன ஆகும்
மாணவி : (சோகமாக)வரலாறில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கும்.
*****

டாக்டர்:என்னையா உன் இதயத்திலே பாட்டுச்சத்தம் கேட்குது
நோயாளி:டாக்டர் நீங்க காதுல மாட்டியிருக்கிறது வாக்மன்.
*****

ஆசிரியர் : கோபு நீ மட்டும் ஏன் ஹோம் வேக் பண்ணலே
கோபு : சேர் நான் ஹாஸ்டலே அல்லா தங்கி இருக்கேன்.
*****

டாக்டர்: உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நோயாளி: நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.
*****

பேரன் : இனிமே கம்ப்யூட்டர் படிச்சா தான் வேலை கிடைக்கும்
தாத்தா: அப்ப நீ படிச்சா கிடைக்காதா..?
*****

மருந்து பாட்டிலை கையில் வெச்சிகிட்டு ஏன் தடவி கொடுகிறீங்க?
டாக்டர் தான் தலை வலிச்சா இதை எடுத்து தடாவனூன்னு சொன்னார்.
*****

என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது அவபேசஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்.
"யோவ் பாங்க்ல வந்து ஏன்யா இதை எல்லாம் சொல்றே"
"நாம கஷ்டத்தை சொன்ன தான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க"
*****

கிளி ஏன் கீ கீ ன்னு கத்துது ?
அதோட கூண்டுச் சாவி தொலைஞ்சு போச்சாம்...
*****

இவன்தான் குற்றவாளின்னு ஒப்புக் கொள்கிறானே நீங்கள் ஏன் இல்லேன்னு வாதாடுறீங்க?
யுவர் ஆனர் இவன் பெரிய கேடி இவனை நம்பவே கூடாது.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக