2013/09/18

அறிவுக்கே அறிவு...

மூன்று பேர் ஒரு ஹோட்டலில் ஒரு ரூம் எடுக்கின்றனர். ஒருவருக்கு வாடகை ரூ.100, மொத்தமாக 300 ரூபாய் தருகின்றனர். சிறிது நேரம் கழித்து கவனித்த மேலாளர் அவர்கள் தங்கி உள்ள அறைக்கு வாடகை ரூ.250 மட்டுமே என்பதை. இப்போது ரூம் பாயை அழைத்து ரூ.50 ஐ திருப்பி கொடுத்து அவர்களிடம் கொடுக்க சொல்கிறார். அந்த ரூம் பாய் அதில் ஆளுக்கு 10 ரூபாய் மட்டுமே திருப்பி தருகிறான். மீதி 20 ரூபாயை அவனே வைத்துக் கொள்கிறான்.

இங்கு கேள்வி என்னவெனில். கணக்கு பாருங்கள் ஒருவருக்கு செலவு ரூ.90, மூவருக்கும் சேர்த்து ரூ.270. ரூம்பாய் வைத்து இருப்பது ரூ.20 எனில் ரூ.300 மீதி 10 ரூபாய் எங்கே?
--------------------------------------------------

இரண்டு அப்பாக்களும், இரண்டு மகன்களும் மீன் பிடிக்க செல்கின்றனர். ஆளுக்கொரு மீன் பிடித்து வருகின்றனர். ஆனால் மொத்தம் மூன்று மீன்கள் மட்டுமே உள்ளது. அது எப்படி?
--------------------------------------------------

தோகை விரித்து ஆடும் மயில் 4 அடி உயரத்தில் இருந்து முட்டை இடுகிறது. முட்டை உடையுமா? உடையாதா?
---------------------------------------------------