2013/07/06

பாலைவனம்





பாலைவனத்தில்  ஒரு  தனி  மரம் 

அந்த  ஒற்றை  மரத்தின்  வாழ்க்கையே 
இன்று  பாலைவனம்...

வரண்டுவிட்ட  -  என் 
வாழ்க்கையின்   தரித்திரத்தை
வரைந்த  சரித்திரத்தை  எண்ணியபோது 
தங்கைகளின்  சிரிப்பொலிகளும் 
மருமக்கள்களின்  கலகலப்புகளும்  -  என்
சோகங்களை  சமாதானப்படுத்தி 
மேகங்களாய்  கலைந்து  போக 
இந்தப்  பாலைவனமும்  -  ஒரு
சோலைவனமாகிறது.... 
2013-07-04