2012/08/07

காலம்

கொட்டும் பனி கருதாது
சுடும் வெயில் கருதாது
வாட்டிடும் களைப்பும் கருதாது
உணர்ச்சியற்ற  உடலாய் - இரத்த
உறவைப் போற்றி
ஊர் பல சுற்றி
ஓர் இரு நாட்களென்ன
பல மாதங்கள்
லொட்ச், பஸ் ஸ்டாண்ட்
ஹொஸ்பிடல்  தொட்ட
உன் கரங்களும் கால்களும்

இன்று
இரத்தமின்றி வைத்தியசாலையை
முத்தமிட்ட போதும்
உறவுகள் சத்தமின்றிப் போனதே...

காலத்தின் கோலம்
புரியவில்லை எனக்கு...
உறவுகளின் நிசப்தம்
தெரியவில்லை எனக்கு...
          -என் தந்தை வைத்தியசாலையில்
                  இருந்தபோது எழுதியது-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக