2014/07/21

ஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிர்

  1. பூச்சியம் தொடக்கம் பத்திற்குள் (0-9) ஏதாவது ஒரு எண்ணை நினைக்கவும் உ+ம் 7
  2. அவ் எண்ணை இரண்டால் பெருக்கவும் -   இங்கு 7*2=14
  3. அத்துடன் 5 ஐக் கூட்டவும்  – 14+5=19
  4. பின் வரும் விடையை 5 ஆல் பெருக்கவும் -   19*5=95. இவ் விடையை எழுதி வைக்கவும்.
  5. இரண்டாவது எண்ணாக பூச்சியம் தொடக்கம் பத்திற்குள் (0-9) இன்னொரு ஒரு எண்ணை நினைக்கவும் உ+ம் 4
  6. இரண்டாவது  நினைத்த எண்ணை (படி 4 இல் ) எழுதி வைத்த எண்ணுடன் கூட்டவும். எனவே 95+4=99
  7. விடையை கூறவும்
நினைத்த இரு எண்களையும் கண்டுபிடிப்பதற்கு
  • கடைசி விடையிலிருந்து 25 ஐக் கழிக்கவும் 99-25=74
  • இங்கு முதல் எண்  நீங்கள் நினைத்த முதல் எண்ணும் இரண்டாவது மற்றைய எண்ணுமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக